
ஒவ்வொரு மனித முகம்போன்றே
ஒவ்வொரு காதலும் வேறு வேறாய்...
பிறக்கும் குழந்தையின்
பொத்திய கைகளுக்குள்
ஒழிந்துகொண்டே பிறக்கிறது…..காதலும்….
காதல் என்பது
வரமாகவோ..இல்லை சாபமாகவோ...
நிச்சயமாய் ஒவ்வொருவனிற்கும் உண்டு...
உடலில் எங்கே இருக்கின்றதென
தெரியாவிடினும்....எங்கோ இருந்து
அழகாய் சித்திரவதை செய்யும்
காதல்..........
பகிரவோ.. பெறவோ முடியாது..
உணர்வதால் மட்டுமே வசமாகும்...
இந்த காதல்...
தோற்றாலும் தோற்காத..
அதிசயமாய்... காதல்..
வென்றவனையும் அடிமையாக்கும்
மதுதானடா.. இந்த காதல்…!!

No comments:
Post a Comment