Pages

Ganesh

Ganesh

Monday, August 18, 2014

வழியெங்கும் கல்லாய் நீ

ஞானியாய்....
தூயவனாய்...
வழிகாட்டும் எழியோனாய் ....
மாசறு துறவியாய்....
மார்க்க சீலனாய்....
தர்மபதா அருளிய பெரியோனாய்....
ஞானம் கண்ட மேலோனாய்...
எத்தனை அறிந்தும்....என்ன
உன்னை எவ்வுயறம் தூக்கிவைத்தும் என்ன....
சித்தார்த்தா.....
நான் தெருவிறங்கி... மீள
வீடு வந்து சேர்கையில்...
உன் அத்தனை உயரங்களும் தகர்ந்து....
விம்பங்களும் உடைந்து..... வெறும்...
ஆக்கிரமிப்பின் சின்னமாய் மட்டுமே
மனதில் நீ தங்கிகொள்கிறாய்.......