Pages

Ganesh

Ganesh

Monday, January 27, 2014

கனவாடிய பொழுதுகள்

உறுத்தாமல் நீட்சியாகும் கனவு...
இடராமல் தொடருகின்ற ஒற்றையடி பாதை...
பெருந்துளியகாமல் சாரலாய் விசிறுகின்ற மழை மேகம்...
கூதல் தொடராமல் மயிர் கால்களை சீன்டிபோகும் இளம் காற்று...
பயம் தராத தனிமை...
எனக்காய் என் பாதையில் பயணிக்கும் பட்டாம் பூச்சி...
காய்ந்துபோகாத தேனை பொத்தி வைத்து சிரிக்கும் காட்டுப்பூக்கள்...
அலைபேசிக்கான அலை வீச்சில் அகப்படாத காற்று வெளி...
சட்டென்று அனிக்ச்சையாய் ஞாபகத்தில் வந்துநிற்கும் பாரதி கவி வரிகள்...
வண்டு செய்த மூங்கில் மரக் குழல்களின் பின்னணி ரீங்காரம்...
தொடர்கிறது எனது தனிமை பயணம்...
கனவென்றாலும்.... காற்றில் மிதக்கிறது இதயம்..
நன்றி என் தனிமைக்கு...!!!!