Pages

Ganesh

Ganesh

Tuesday, March 2, 2010

காதல் தோல்வி


கடற்கரை….
சுண்டல்….
இரு நண்பர்கள்….
ஒருவன் சோகமாய்….
ஒருவன் கேள்வியாய்…..
மச்சான் என்னடா நடந்தது...
காதல் தோல்விடா...
காதல் தோற்காது.. நீ தோற்றாய் என சொல்...
ஏதோ ஒன்று.. மொத்தத்தில் தோல்வி மிச்சம்...
இருக்கட்டும்... நடந்தது சொல்...
உனக்கே தெரியுமே.. நான் காதலித்தேன்....
நீ மட்டுமே காதலித்தாய்.. ஒருதலைக்காதல்....
காதலின் ஆரம்பம் ஒருதலைதானேடா....
சரி... நீ காதலின் ஆரம்பத்திலிருந்தாய்... மேலே சொல்...
அவளுக்கு கவிதையென்றால் உயிர்....
ஓ.. கவிதைக்கு கவிதை உயிரா...
வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதே...
சரி.. சரி... அதற்கும் உன்தோல்விக்கும் ஏது சம்பந்தம்....
அவளிற்கு காதலன் கவிஞனாய் வேண்டுமாம்...
போச்சுடா… முதல்பந்தே உனக்கு இப்படியா…
எனக்கு கவிதையே வராது....
அதுதான் ஊரறிந்த விசயமாச்சே....
நானும் முயற்சித்தேன்... என் அறைதான்குப்பையானது...
அதற்குமுன்மட்டும் சுத்தமாய் இருந்ததோ...
கிண்டல்செய்யாதே... அழுதுவிடுவேன்...
செய்யவில்லை..நீ செப்பு...
முடிவில் கள்ளமாய் ஒரு வழி கண்டேன்...
அதுதான் உனக்கு கை வந்த கலையாச்சே...
நண்பன் ஒருவனின் கவி திருடி அவளிடம் சேர்ப்பித்தேன்..
அடப்பாவி... ஆனாலும் கைகூடியிருக்கவேண்டுமே காதல்...
இல்லையடா... விளையாடி விட்டது விதி என்னில்…
நீ என்ன மைதானமா.. விதி உன்னில் விளையாட.. நடந்ததுசொல்…
கைமாறிப்போனதடா என் காதல்...
உன் காதல் என்ன ரூபா நோட்டா... விசயத்திற்கு வா…
அவள் அவனுடனே கூடிவிட்டாள்...
அவனென்றால்... உண்மையில் கவியெழுதியவனா...
ஆமாமடா... அவனேதான்... துரோகி...
என்ன கொடுமையடா... எப்படியடா நடந்ததிது....
கவிதான் என நினைத்து.....
கவிதான் என நினைத்து.....???
கவி முடிவில் இருந்த அவன் பெயரையும் அன்றோ
எழுதிகொடுத்துவிட்டேன் அவளிடம்....
போடா…… ஆஐஉஉஇ ஊஏஎள புபநசஞகூ கடமற.....
(இவனை இப்படியாய் திட்டாமல் என்செய்வான் நண்பன்)

No comments:

Post a Comment