
கொஞ்சம் காலம் தாழ்த்திய பார்வைதான்என்றாலும் இப்பொழுதுதான் எனக்கு காணக்கிடைத்தது, ஆதலால் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலும் தோன்றிற்று.
Progeria என்ற நோய் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வாழ்க்கைக்கு அருகிருந்து பார்க்கும்போது நெஞ்சம் பாரமாகின்றது. மூன்று கதாபாத்திரங்களைச்சுற்றியே வட்டமிடும் கதை எங்கேயும் தொய்ந்துபோகாதது திரைக்கதையின் பலம். இசை இளையராஜா, 80களின் இளையராஜாவை மீண்டும் காணக்கிடைக்கிறது. ஏற்கனவே மனதை திருடிச்சென்ற பாடல்கள் ஆங்காங்கே பின்னனி இசையிலும், ஒரு பாடலுமாய் என அழகாய்த் தொட்டுச்செல்கின்றது. பி.சி.சிறிராமின் கமரா கதையுடன் கைகோர்த்து நடக்கின்றது. வசனங்கள் அருமை. நடிகர்கள் சரியான தேர்வு. தாயாய் வித்தியா பாலன் முழுமை சேர்க்கிறார். இளம் MPயாய் அபிசேக் பச்சன்… ராகுல் காந்தியின் style தெரிகின்றது, freshஆக இருக்கின்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாய் கதையின் நாயகன் 13 வயது சிறுவன் Auro, 68 வயது அமிதாப்பச்சன் என்பதை நம்ப முடியாமலே இருக்கின்றது. தன்னைத்தவிர யாருமே இந்த பாத்திரமாய் வாழமுடியாது என மனுசன் சொல்லாமல் சொல்கிறார். குழந்தைதன குறும்புகளுடன் எல்லைமீறாத அந்த கதாப்பாத்திரமே கவிதை பாடுகின்றது.
Indian President ஐ பார்க ஆயத்தமாகி அது முடியாமல்போக யாருடனும் பேசாமல் அறையை பூட்டிக்கொண்டிருப்பதும் அம்மாவும் பாட்டியும் video game விளையாட ஆற்றாமல் வந்து அதை பறித்து தான் விளையாடுவதும் குழந்தைத்தன psychological touch. President ஐ காண செல்வதைப்பற்றி பாட்டி நம்பிக்கையின்றி பேசும்வேளையில் அந்த குரங்கு பொம்மையிடம் போய் Aren’t u a non vegetarian? Eat her up என்று சொல்வதும், பாட்டியை Bumb என்ற அழைப்பதற்கான காரணத்தை அபிசேக்கிடம் குழந்தை தனத்துடன் சொல்வதும், தன்னுடன் அடிக்கடி பேச வரும் அந்த சிறுமியை கண்டு விலகி ஓடுவதும், அதற்கான காரணத்தை இறுதிகாட்சிகளில் சொல்வதும் என சின்ன சின்ன காட்சிகளைகூட அழகாய் சொல்லியிருக்கிறார்கள். அபிசேக்கின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் லேசாய் சினிமாத்தனம் தெரிகின்றது, அது தவிர்க்கப்பட்டிருக்களாம். நோயின் தன்மை வெளித்தெரியும் சந்தர்ப்பங்களில்அந்த சிறுவனுடன் சேர்ந்து எங்களின் இதயமும் அடித்துக்கொள்கிறது. ஊகிக்கக்கூடிய முடிவுதான் என்றாலும் மனதை பாரமாக்கிவிடுவது அமிதாப்பின் நடிப்பு.
இப்படியான வேறுபட்டகோணங்களினூடான சினிமாவின் யதார்த்தங்களினூடான பயணமே ரசிகனை பூரணமாய் திருப்திப்படுத்த முடியும். இப்படியான பயணத்தை தமிழ் சினிமா எப்போதுஆரம்பிக்கப்போகின்றது.
மொத்தத்தில் இக்கவிதையை எழுதி இயக்கிய Director R.Balkiஇற்கு ரசிகர்கள் சார்பாக ஒரு Hug கொடுக்கலாம்.

No comments:
Post a Comment