Pages

Ganesh

Ganesh

Friday, March 12, 2010

அந்திச்சபதங்கள்


என் உள்மன வேர்களில் விழட்டும்

உன் கோடரி....

ஆழி என்னுள் புகுந்து

மொத்தமாய் சுருட்டிச்செல்லட்டும்

நீ பற்றிய நினைவுகளை...

பற்றிபடரும் காட்டுத்தீ

என்னிலும் நுழைந்தெரிந்து

கருக்கிச்செல்லட்டும்

என் ஞாபகச்சருகுகளை...

வறண்ட நிலத்தில்

விழுந்த நீர்த்திவளையாய்

காணாமல்போகட்டும்

கசந்துபோன எண்ணக்குப்பைகள்..

விழித்தெழும் வேளை

சூரியன் புதிதாய் முளைக்கட்டும்...

உன்னை ஞாபகம்செய்யும் நிலவு

இவ் இருளோடு தொலைந்துபோகட்டும்...

நாளை வேறு புதிதாய்

கறைகழுவிய நிலவு பிறக்கட்டும்...

இவ்விரவு தூக்கத்தோடு நான் இறந்துபோய்

புதிய பொழுதின் புலர்வின்போது

உனை முதல்கண்ட நொடிக்கு

முன்னைய கணம்வரையிருந்த

நானாய் மறுபிறப்பெடுப்பேன்...

இப்படியான….

ஒவ்வொரு இரவுச்சபதமும்

தோற்றுப்போகிறதடி என் காலையின் புலர்வில்...

No comments:

Post a Comment