
சோ..வென்ற மழை....
என்னைமட்டும் வளைத்து வானவில்....
கடல் முத்தமிட குனிந்து விட்ட மலைஉச்சி...
தனிமையில் நான்...
கடிகாரத்தின் கால்களை கட்டிபோட்டுவிட்டு
இருகைகள் விரித்தபடியாய் உயிர்வரை நனைகிறேன்...
சட்டென்று இமைகள்திறக்க சுயம்விழித்தேன்...
அட... கனவு....
உடல் ஈரமில்லை... ஆனாலும் நனைந்துவிட்டிருக்கிறேன்...

No comments:
Post a Comment